கல்நேவ தேசிய பாடசாலை ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட துடுப்பாட்ட மட்டை பிரச்சினையே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
குறித்த பிரச்சினையினால் மாணவர் ஒருவரை விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் தாக்கியுள்ளார். இதன் பின்னர் அம்மாணவன் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தாக்கப்பட்ட மாணவனை சந்திப்பதற்க்காக விளையாட்டுத்துறை ஆசிரியரோடு மேலும் ஒரு ஆசிரியர் மாணவனின் வீட்டுக்கு சென்ற நிலையிலே ஆசிரியர்கள் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.